Bible Language

Jonah 1:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
IRVTA   அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் யெகோவா; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
ERVTA   எனவே அவர்கள் கர்த்தரிடம், "கர்த்தாவே, நாங்கள் இவனை அவன் செய்த தவறுக்காக கடலில் தூக்கி எறிகிறோம். எனவே, ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றோம் என்று எங்களைக் குற்றப்படுத்தாதிரும். நாங்கள் அவனைக் கொன்றதற்காக எங்களை மரிக்கச் செய்யாதிரும். நீர்தான் கர்த்தர், நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்வீர் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் தயவு செய்து எங்களிடம் இரக்கமாய் இரும்" என்று அழுதார்கள்.
RCTA   ஆகவே, அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டு, "ஆண்டவரே, இந்த மனிதனின் உயிரை முன்னிட்டு எங்களை அழிய விடாதேயும்; மாசற்ற இரத்தப் பழியை எங்கள் மேல் சுமத்தாதேயும்; ஏனெனில், ஆண்டவரே, உமக்கு விருப்பமானதை நீர் தான் செய்கிறீர்" என்று மன்றாடினர்.
ECTA   அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி, "ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழிய விட வேண்டாம்; குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள் மீது பழி சுமத்தவேண்டாம். ஏனெனில், ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்" என்று சொல்லி மன்றாடினார்கள்.