Versions
TOV ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.
IRVTA ஐந்தாம் நாளிலே அவன் போகும்படி அதிகாலையில் எழுந்தபோது, பெண்ணின் தகப்பன்: இருந்து உன்னுடைய இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே மாலைவரை இருந்து, இருவரும் சாப்பிட்டார்கள்.
ERVTA பின்பு, ஐந்தாம் நாளில், லேவியன் அதி காலையில் எழுந்தான். புறப்படுவதற்கு அவன் தயாரானான். ஆனால் அப்பெண்ணின் தந்தை மருமகனை நோக்கி, "முதலில் ஏதேனும் சாப்பிடு. களைப்பாறி நடுப்பகல் வரைக்கும் தங்கியிரு" என்றான். எனவே இருவரும் சேர்ந்து உண்டனர்.
RCTA பொழுது விடிந்த பின் லேவியன் புறப்படவிருந்தான். திரும்பவும் மாமனார், "கொஞ்சம் சாப்பிட்டுத் திடம் கொள்; சற்றுப் பொழுது சென்ற பின் நீ புறப்படலாம்" என்று வேண்டினான்.
ECTA அவர், ஐந்தாம் நாள் புறப்படுவதற்காக அதிகாலையில் எழுந்தார். அப்போது பெண்ணின் தந்தை உம் இதயம் மகிழுமாறுபொழுது சாயும்வரை இங்கே தங்கும்" என்றார். இருவரும் உண்டனர்.