Versions
TOV அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது, எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.
IRVTA அவர்கள் போய், யெகோவாவுக்கு முன்பாக மாலைவரை அழுது, எங்கள் சகோதரர்களாகிய பென்யமீன் மக்களோடு திரும்பவும் யுத்தம் செய்யப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது யெகோவா: அவர்களுக்கு எதிராகப் போங்கள் என்றார்.
ERVTA 23.
RCTA ஆனால் அப்படிச் செய்வதற்கு முன் அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகப் போய் அவர் முன்னிலையில் இரவு வரை அழுது, "எம் சகோதரனான பெஞ்சமின் மக்களை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டுமா, வேண்டாமா?" என்று கேட்டனர். அதற்கு ஆண்டவர், "நீங்கள் எழுந்து சென்று போரைத் தொடங்குங்கள்" என்று பணிந்தார்.
ECTA இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் மாலைவரை அழுதனர். இஸ்ரயேல் மக்கள் தம் சகோதரர்களாகிய் பென்யமின் மக்களுடன் மீண்டும் போரிடச் செல்லலாமா என்று ஆண்டவரிடம் கேட்டனர். ஆண்டவர், அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள் என்றார்.