Versions
TOV அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
IRVTA அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
ERVTA கூட்டத்திற்கு முன் பவுல் அழைக்கப்பட்டான். தெர்த்துல்லு குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கத் துவங்கினான். தெர்த்துல்லு, மிகக் கனம் பொருந்திய பெலிக்ஸ் அவர்களே! உங்களால் எங்கள் மக்கள் மிகுந்த அமைதியோடு வாழ்கிறார்கள். உங்கள் ஞானமான உதவியால் எங்கள் நாட்டில் பல தவறான காரியங்கள் திருத்தப்பட்டு வருகின்றன.
RCTA சின்னப்பரை அங்குக் கொண்டுவந்து நிறுத்தியதும், தெர்த்துல்லு அவர்மேல் இவ்வாறு குற்றம் சாட்டத் தொடங்கினான்: "மாட்சிமை மிக்க பெலிக்ஸ் அவர்களே, நாடெங்கும் பேரமைதி நிலவுவது உம்மாலே, எங்கும் எத்துறையிலும் இந்நாடு சீரடைந்து ஓங்குவது உமது பராமரிப்பினாலே, இதைமிகுந்த நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம்.
ECTA தெர்த்துல் அழைக்கப்பட்டபோது, அவர் குற்றம் சாட்டத் தொடங்கிக் கூறியது; "மாண்புமிகு பெலிக்சு அவர்களே! உம்மால் தான் நாட்டில் பேரமைதி நிலவுகிறது.