Versions
TOV இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
IRVTA இதோ, திறமையும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புயல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
ERVTA பார், எனது ஆண்டவர் பலமும் தைரியமும் கொண்டவராக இருக்கிறார். அவர் பெருங்காற்றும் கல்மழையும் கொண்ட நாட்டுக்குள் வருவார். அவர் ஒரு புயலைப் போன்று நாட்டுக்குள் வருவார். அவர் ஒரு சக்திவாய்ந்த ஆறு நாட்டுக்குள் பெருக்கெடுத்து வருவதுபோன்று இருப்பார். அவர் அந்தக் கிரீடத்தை (சமாரியா) தரையில் தள்ளுவார்.
RCTA இதோ, ஆண்டவர் அனுப்பிய ஆற்றலும் வல்லமையுமுள்ள ஒருவன், அவன் ஆலங்கட்டி மழை போலும், அழித்துப் பாழாக்கும் புயல் போலும், கரை புரண்டு பாயும் வெள்ளப்பெருக்குப் போலும், தன் கை வன்மையால் அவர்களைத் தரையில் வீழ்த்துவான்.
ECTA இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன் என் தலைவரிடம் உள்ளான்; அவன் கல்மழையென, அழிக்கும் புயலென, கரை புரண்டோடும் பெருவெள்ளமென வந்து, தன் கைவன்மையால் அதைத் தரையில் வீழ்த்துவான்.