Versions
TOV நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.
IRVTA நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் பிரதிநிதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான இடங்களை எடுப்பிப்பவர்.
ERVTA கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் தமது செய்திகளைச் சொல்ல அனுப்புகிறார். கர்த்தர் அந்தச் செய்திகளை உண்மையாக்குகிறார். கர்த்தர் ஜனங்களிடம் அவர்கள் செய்யவேண்டியதைச் சொல்லத் தூதுவர்களை அனுப்புகிறார். கர்த்தர் அவர்களது ஆலோசனைகளை நிறைவேற்றுவார். கர்த்தர் எருசலேமிடம் கூறுகிறார், "ஜனங்கள் மீண்டும் உன்னிடம் வாழ்வார்கள்!" யூதாவின் நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்: "நீங்கள் மீண்டும் கட்டப்படுவீர்கள்!" அழிந்துபோன நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்: "நகரங்களே! உங்களை மீண்டும் அமைப்பேன்".
RCTA நம் ஊழியனின் வாக்கியத்தையோ உறுதிப்படுத்துகிறோம், நம் தூதர்களின் மொழிகளை நிறைவேற்றுகிறோம்; யெருசலேமைப் பார்த்து, 'நீ குடியிருப்பு ஆவாய்' என்றும், யூதாவின் நகரங்களுக்கு, 'நீங்கள் கட்டப்படுவீர்கள், அதன் பாழடைந்த இடங்களை எழுப்புவோம்' என்றும், சொல்லுகிறவர் நாமே.
ECTA என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்; என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்; எருசலேமை நோக்கி, "நீ குடியமர்த்தப் பெறுவாய்" என்றும் யூதா நகர்களிடம், "நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்" என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்" என்றும் கூறுகின்றேன்.