Versions
TOV அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் தேசத்தின் கடையாந்தரங்கள் மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
IRVTA அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும்,
அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்;
அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்;
அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள்” என்றான்.
ERVTA யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான். அவனது இரு மகன்களும் காளையின் கொம்புகளைப் போன்றுள்ளனர். அவர்கள் மற்ற ஜனங்களைத் தாக்கிப் பூமியின் கடைசிவரை தள்ளுவர்! ஆமாம், மனாசே ஆயிரக்கணக்கான ஜனங்களையும், எப்பிராயீம் பத்தாயிரக்கணக்கான ஜனங்களையும் தள்ளியிருக்கிறார்கள்." இசக்காருக்கான ஆசீர்வாதம்
RCTA இவனழகு பசுவின் தலையீற்றுக்காளையின் அழகைப் போலாம். இவன் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகளை ஒத்தனவாம். அவைகளாலே மக்களை நாட்டின் கடைக் கோடிவரையிலும் அவன் முட்டித் துரத்துவான் என்றார். எபிராயீமின் படைகளும் மனாஸேயின் படைவீரார்களும் அவ்வாறே இருப்பார்கள் என்றார்.
ECTA அவனது நடை தலையீற்றுக் காளையின் பீடுநடை போன்றது. அவனின் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகள் போன்றவை; அவற்றால் மக்களினத்தாரைப் பூவுலகின் கடை எல்லைவரை முட்டித் துரத்துவான். அவை எப்ராயிமின் பதினாயிரம் படைகளும் மனாசேயின் ஆயிரம் படைகளும் ஆகும்.