Bible Language

Isaiah 37:24 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,
IRVTA   உன் ஊழியக்காரர்களைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், விலையுயர்ந்த தேவதாரு மரங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும்,
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவரைப்பற்றி எதிராகப் பேச உனது வேலைக்காரர்களைப் பயன்படுத்தினாய். நீ, "நான் வல்லமையுள்ளவன்! என்னிடம் பற்பல இரதங்கள் உள்ளன. எனது வல்லமையால் நான் லீபனோனைத் தோற்கடித்தேன். லீபனோனின் மலை உச்சிகளில் நான் ஏறினேன். நான் லீபனோனில் உள்ள உயரமான மரங்களை (படைகள்) வெட்டித் தள்ளினேன். நான் மலையின் உச்சிக்கும் காட்டின் மிக ஆழமான பகுதிக்கும் சென்றிருக்கிறேன் என்று கூறினாய்.
RCTA   உன் ஊழியர்கள் வழியாய் நீ ஆண்டவரைப் பழித்தாய், நீ சொன்னாய்: திரளான என் தேர்ப்படைகளோடு மலைகளின் உச்சிகளுக்கும் லீபான் குன்றின் கொடு முடிக்கும் நான் ஏறிப் போனேன்; அதன் மிக உயரமான கேதுரு மரங்களை வீழ்த்தினேன், அதன் மிகச் சிறந்த தேவதாரு மரங்களை வெட்டினேன்; மிகத் தொலைவான அதன் உச்சியையும் அடைந்தேன், அடர்ந்த அதன் காடுகளையும் அழித்தேன்.
ECTA   நீ உன் பணியாளர்களைக் கொண்டு என் தலைவரைப் பழித்துரைத்து, என் பெரும் தேர்ப்படையுடன் நான் மலை உச்சிகளுக்கும் லெபனோனின் மலைச்சரிவுகளுக்கும் ஏறினேன்; வானளாவிய அதன் கேதுரு மரங்களையும் மிகச்சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டி வீழ்த்தினேன்; கடை எல்லையிலுள்ள அதன் உச்சிக்கும் அடர்த்தியான அதன் காட்டுப் பகுதிக்கும் வந்தேன்.