Bible Language

Isaiah 41:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி,
IRVTA   கிழக்கிலிருந்து நீதிமானை * கோரேஸ் என்ற பெர்சியாவின் தேசாதிபதி, பார்க்க 45:1. எழுப்பி, தமது பாதப்படியிலே வரவழைத்தவர் யார்? தேசங்களை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவனுடைய பட்டயத்திற்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட வைக்கோலுமாக்கி,
ERVTA   இந்த வினாக்களுக்கு என்னிடம் பதில் சொல்லுங்கள். கிழக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிற மனிதனை எழுப்பியது யார்? நன்மையானது அவரோடு நடக்கிறது. அவர் தமது வாளைப் பயன்படுத்தி நாடுகளைத் தாக்குகிறார். அவைகள் தூசிபோல ஆகின்றன. அவர் தமது வில்லைப் பயன்படுத்தி அரசர்களை வென்றார். அவர்கள் காற்றால் அடித்துச் செல்லப்படும் துரும்புகளைப் போன்று ஓடிப்போனார்கள்.
RCTA   செல்லுமிடமெல்லாம் வெற்றி எதிர்கொள்ளும் வீரரைக் கீழ்த்திசையில் எழுப்பியவர் யார்? அவருக்கு மக்களினங்களைக் கையளித்து, அரசர்களை அவருக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவருடைய வாள் அவர்களை தவிடு பொடியாக்குகிறது, அவரது வில் அவர்களைப் புயலில் அகப்பட்ட வைக்கோலைப் போலச் சிதைக்கிறது.
ECTA   சென்றவிடமெல்லாம் சிறப்புறும் நேர்மையாளனைக் கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்? மக்களினங்களை அவனிடம் கையளித்து அரசர்களை அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவன் வாள் அவர்களைப் புழுதியாக்குகிறது; அவன் வில் அவர்களைப் பதர்போல் பறக்கச் செய்கிறது.