Versions
TOV கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.
IRVTA யெகோவா சொல்கிறது என்னவென்றால்: ஒரு திராட்சைக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்கிறபடி, நான் என் ஊழியக்காரருக்காக அனைத்தையும் அழிக்கவிடாமல் செய்வேன்.
ERVTA கர்த்தர் கூறுகிறார், "ஒரு திராட்சைக் குலையில் இரசம் காணப்படும்போது, ஜனங்கள் இரசத்தைப் பிழிந்தெடுப்பார்கள். ஆனால், அவர்கள் திராட்சையை முழுமையாக அழிப்பதில்லை. அவர்கள் இதைச் செய்கின்றனர். ஏனென்றால், அந்தத் திராட்சைகள் மேலும் பயன்படுத்தப்படும். நான் இதனையே என் ஊழியர்களுக்கும் செய்வேன். நான் அவர்களை முழுமையாக அழிக்கமாட்டேன்.
RCTA திராட்சைக் குலையில் இரசம் இருந்தால், 'அதை அழிக்காதே, அது ஆசீர்வாதம்" என்று மக்கள் சொல்லுகிறார்கள்; அதுபோலவே, நம் அடியார்களை முன்னிட்டும் செய்வோம்; இஸ்ராயேல் முழுவதையுமே அழித்துவிட மாட்டோம்.
ECTA ஆண்டவர் கூறுவது இதுவே; திராட்சைக்குலையில் புது இரசம் கிடைக்கும்போது, "அதை அழிக்காதே, அதில் ஆசி உள்ளது" என்பார்கள். அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும் நான் செயலாற்றுவேன்; அவர்கள் அனைவரையும் அழிந்துவிட மாட்டேன்.