Bible Language

Jeremiah 23:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.
IRVTA   ஆதலால் சேனைகளின் யெகோவா தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரவிற்றோ என்று சொல்லுகிறார்.
ERVTA   எனவே, தீர்க்கதரிசிகளைப்பற்றி சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறது இதுதான்: "நான் அத்தீர்க்கதரிசிகளை தண்டிப்பேன். தண்டனையானது விஷமுள்ள உணவை உண்பது போலவும், விஷத்தண்ணீரை குடிப்பதுபோன்றும் இருக்கும். தீர்க்கதரிசிகளுக்கு ஆன்மீக நோய் ஏற்பட்டது. அந் நோய் நாடு முழுவதும் பரவியது. எனவே, அத்தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அந்நோய் எருசலேமிலிருக்கும் தீர்க்கதரிசிகளிடமிருந்து வந்தது."
RCTA   ஆகவே சேனைகளின் ஆண்டவர் தீர்க்கதரிசிகளைக் குறித்துக் கூறுவது இதுவே: "இதோ, அவர்களுக்கு உண்ண எட்டியையும், குடிக்க நஞ்சு கலந்த நீரையும் கொடுப்போம்; யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடம் இருந்தே கடவுட்பற்றின்மை நாடெங்கும் பரவிற்று."
ECTA   எனவே இறைவாக்கினரைப் பற்றிப் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; அவர்களை எட்டிக்காய் உண்ணச் செய்வேன்; நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன். ஏனெனில், எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே இறைஉணர்வின்மை நாடெங்கும் பரவிற்று.