Bible Language

John 19:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
IRVTA   அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள். PS
ERVTA   அதற்கு யூதர்கள், அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள் என்று சத்தமிட்டனர். அவர்களிடம் பிலாத்து, உங்களது அரசனை நான் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று கேட்டான். அதற்குத் தலைமை ஆசாரியன், எங்களது ஒரே அரசர் இராயன் மட்டுமே என்று பதில் சொன்னான்.
RCTA   அவர்களோ, "ஒழிக, ஒழிக! இவனைச் சிலுவையில் அறையும்! " என்று கத்தினார்கள். அதற்குப் பிலாத்து, "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைவதா?" என்று கேட்க, தலைமைக்குருக்கள், "செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை" என்று சொன்னார்கள்.
ECTA   அவர்கள், "ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை" என்றார்கள்.