Bible Language

John 21:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
IRVTA   இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
ERVTA   மீண்டும் பேதுருவிடம் இயேசு யோவானின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா? என்று கேட்டார். ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும் என்று பேதுரு சொன்னான். பிறகு பேதுருவிடம் இயேசு, எனது மந்தையைக் கவனித்துக்கொள் என்று சொன்னார்.
RCTA   இரண்டாம் முறையாக இயேசு அவரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, நீ எனக்கு அன்புசெய்கிறாயா ?" என, அவர் அவரை நோக்கி, "ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார். இயேசுவோ அவரிடம், "என் ஆடுகளைக் கண்காணி" என்றார்.
ECTA   இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார்.