Versions
TOV அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
IRVTA அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
ERVTA இவ்வாறு சிம்சோன் இஸ்ரவேலருக்கு இருபது ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். இது பெலிஸ்தியரின் காலத்தில் நடந்தது. சிம்சோன் செல்லுதல்
RCTA அவனைத் தட்டி எழுப்பி, "சாம்சன், இதோ, பிலிஸ்தியர் வருகின்றனர்" என்றாள். அவன் விழித்தெழுந்து ஆண்டவர் தன்னை விட்டு அகன்று விட்டதை அறியாதவனாய், "நான் முன்பு செய்தது போல் வெளியேறித் தப்பித்துக் கொள்வேன்" என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
ECTA அவள், "சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்!" என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து "முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன்" என்று சொன்னார். ஏனெனில் ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார் என்பதை அவர் உணரவில்லை.