Versions
TOV அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.
IRVTA அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாமலிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், யெகோவாவுக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.
ERVTA பாதிக்கப்பட்டவன் ஒருவேளை மரித்து போயிருந்தாலோ, அத்தொகையை ஏற்றுக் கொள்ள அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லா மலிருந்தாலோ, அவன் அத்தொகையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அவன் அம்முழுத்தொகையையும் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசாரியன் அவனது பாவநிவிர்த்திக்காக ஆட்டுக் காடாவை பலியாகச் செலுத்த வேண்டும். அதனைப் பலியிடுவதன் மூலம் ஜனங்கள் செய்த பாவமானது நிவிர்த்தி செய்யப்படுகிறது. மீதி பணத்தை, ஆசாரியன் வைத்துக்கொள்ள வேண்டும்.
RCTA அதை வாங்குவோர் ஒருவரும் இல்லையென்றால், அது ஆண்டவருக்குச் செலுத்தப்படும். அது ஆண்டவரைச் சமாதானப் படத்தப் பாவ நிவர்த்திக்கென்று கொடுக்கப் படும் ஆட்டுக்கிடாய் நீங்கலாக மற்றவை குருவைச் சேரவேண்டும்.
ECTA குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முறை உறவினர் இல்லையெனில் அந்த குற்ற ஈட்டுத்தொகை ஆண்டவர்கு, அதாவது குருவிடம் சேரும்; இது அவன் குற்ற நீக்கத்துக்காகச் செலுத்தும் ஈட்டுப்பலி;; ஆட்டைத் தவிரச் சேரவேண்டியது,