Bible Language

1 Kings 21:10 (NCV) New Century Version

Versions

TOV   தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
IRVTA   தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
ERVTA   அவன் மீது பொய்க்குற்றம் சாட்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வேண்டும். அவன் அரசனுக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசினான் என்று கூறவேண்டும். பின் அவனை ஊருக்கு வெளியே கல்லெறிந்த கொல்லவேண்டும்" என்று எழுதியிருந்தது.
RCTA   அவனுக்கு எதிராய்ப் பெலியாலின் மக்கள் இருவரை ஏவி விட்டு, 'நாபோத் கடவுளையும் அரசனையும் பழித்துரைத்தான்' என்று அவர்களைப் பொய்ச்சாட்சி சொல்லச் செய்யுங்கள். பின்னர் அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லால் எறிந்து கொன்று போடுங்கள்" என்று எழுதியிருந்தாள்.
ECTA   அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவி விட்டு, 'நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்' என்று அவன் மீது குற்றம் சாட்டச்செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்" என்று எழுதியிருந்தாள்.