Bible Language

1 Samuel 5:6 (NCV) New Century Version

Versions

TOV   அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
IRVTA   அஸ்தோத் ஊர்க்காரர்களை வாதிக்கும்படி யெகோவாவுடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் மக்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
ERVTA   அஸ்தோத்து ஜனங்களுக்கும், அவர்களது அக்கம், பக்கத்தினருக்கும் வாழ்க்கைச் சிரமமாகும்படி கர்த்தர் செய்தார். கர்த்தர் அவர்களுக்கு பல துன்பங்களைத் தந்தார். அவர்களை தோல் கட்டிகளினால் வாதித்தார். அவர்களுக்கு சுண்டெலிகளையும் அனுப்பினார். அவை அவர்களின் கப்பல்களுக்கும், நிலப்பகுதிகளுக்கும் பரவியது. நகர ஜனங்கள் அஞ்சினார்கள்.
RCTA   மேலும், ஆண்டவரின் கை அசோத்தியர்மேல் வன்மையாக விழுந்தது. அவர் அவர்களைத் தண்டித்தார். அசோத்திலும் அதன் எல்லைகளிலும் இருந்தவர்களுக்கு மறைவிடத்தில் நோய் வரச்செய்தார். அன்றியும் அந்நாட்டின் நடுவேயிருந்த ஊர்களிலும் வயல்களிலும் மக்கள் கலங்கும்படி கணக்கற்ற எலிப்படை தோன்றினது; ஊரிலும் சாவின் குழுப்பம் அதிகமாயிருந்தது.
ECTA   அஸ்தோதின் மக்களை அழிக்கும் படியாக ஆண்டவரின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியது. அஸ்தோது வாழ் மக்களையும் அதன் எல்லைக்கு உட்பட்டவர்களையும் அவர் மூலக் கட்டிகளல் வாட்டி வைத்தனர்.