Versions
TOV பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.
IRVTA சிறுவனின் தாயோ: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.
ERVTA ஆனால் அவள், "நீங்கள் இல்லாமல் நான் போகமாட்டேன்!" என்றாள். எனவே எலிசா எழுந்து அந்த சூனேமியப் பெண்ணோடு போனான்.
RCTA ஆனால் சிறுவனின் தாய் எலிசேயுவை நோக்கி, "ஆண்டவர் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விடவே மாட்டேன்" என்றாள். ஆதலால் எலிசேயு எழுந்து அவளைப் பின்தொடர்ந்தார்.
ECTA ஆனால், பிள்ளையின் தாய் "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர்மேலும் ஆணை! உம்மை நான் விடமாட்டேன்" என்றார்.