Bible Language

2 Kings 7:12 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான்.
IRVTA   அப்பொழுது இராஜா இரவில் எழுந்து, தன் வேலைக்காரர்களை நோக்கி: சீரியர்கள் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் முகாமை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்றான்.
ERVTA   அது இரவு நேரம், ஆனால் அரசன் படுக்கையிலிருந்து எழுந்து தன் அதிகாரிகளிடம், "ஆராமிய வீரர்கள் நமக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறேன். நமது பட்டினியையும் வறுமையையும் பார்த்து, கூடாரத்தைவிட்டு வயலில் ஒளிந்துக்கொண்டனர். ‘இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தைவிட்டு வெளியே வரும்போது உயிரோடு நாம் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதன் பிறகு நகருக்குள் நுழையலாம்’ என்று இருக்கிறார்கள்" என்று சொன்னான்.
RCTA   அரசன் அந்த இரவிலேயே எழுந்து தன் ஊழியர்களை நோக்கி, "சீரியர் நமக்கு எதிராகச் செய்ய நினைத்த சதியைக் கேளுங்கள். நாம் பசியால் வருந்துவதை அறிந்து அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, 'இஸ்ராயேலர் நகரிலிருந்து வெளியே வருவார்கள். அப்போது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக் கொண்டு நகரினுள் நுழையலாம்' என்று எண்ணி, வயல் வெளிகளில் ஒளிந்திருக்கிறார்கள் போலும்" என்றான்.
ECTA   அரசன் இரவிலேயே எழுந்து தன் பணியாளரை நோக்கி, "சிரியர் நமக்கு எதிராகச் செய்துள்ளதைக் கேளுங்கள்; நாம் பட்டினியால் வருந்துவதை அறிந்து, அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, 'இஸ்ரயேலர் நகரிலிருந்து வெளியேறுவார் அப்பொழுது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக்கொண்டு நகரினுள் நுழையலாம்' என்று எண்ணி வயல்வெளிகளில் ஒளிந்திருக்கின்றனர்" என்றான்.