Bible Language

Isaiah 7:3 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார் யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,
IRVTA   அப்பொழுது யெகோவா ஏசாயாவை நோக்கி: நீயும் உனது மகன் சேயார் யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேல்குளத்து மதகின் கடைசிவரை ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,
ERVTA   பிறகு கர்த்தர் ஏசாயாவிடம், நீயும் உனது மகனான சேயார் யாசூபும் வெளியே போய் ஆகாசிடம் பேசுங்கள். மேல் குளத்தில் தண்ணீர் பாய்கிற இடத்துக்குப் போங்கள். இது வண்ணார நிலத்துக்குப் போகும் தெரு.
RCTA   அப்போது ஆண்டவர் இசையாசை நோக்கிக் கூறினார்: "நீயும் உன் மகன் ஷூயார் யஷபூ என்பவனும் 'வண்ணான் வயல்' என்னுமிடத்திற்குப் போகும் சாலையில், மேற்குளத்துக்குப் போகும் கட்டுக் கால்வாயின் மறுமுனைக்குப் போய் அங்கே ஆக்காசைச் சந்தித்து,
ECTA   அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி; "நீ உன் மகன் செயார் யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்;