Bible Language

Jeremiah 30:18 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.
IRVTA   யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் குடியிருக்கும் இடங்களுக்கு இரக்கம்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரண்மனை முன்போல நிலைப்படும்.
ERVTA   கர்த்தர் கூறுகிறார்: "யாக்கோபின் ஜனங்கள் இப்போது சிறையிருப்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்ப வருவார்கள். யாக்கோபின் வீடுகளில் நான் இரக்கம்கொள்வேன். இப்பொழுது நகரம் காலியான குன்றுபோல அழிந்த கட்டிடங்களோடு இருக்கின்றது. ஆனால் நகரம் மீண்டும் கட்டப்படும். அரசனின் வீடும் மீண்டும் எங்கிருக்க வேண்டுமோ அங்கே கட்டப்படும்.
RCTA   மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்: நாம் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்ப நிலை நாட்டுவோம்; அவன் வீடுகளின் மீது இரக்கம் காட்டுவோம்; நகரம் தன் மலையின் மேல் மீண்டும் கட்டப்படும்; அரண்மனையும் முன்னிருந்த இடத்தில் அமைக்கப்படும்;
ECTA   ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களை திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள்மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள்மேலேயே நகர் மீண்டும் எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும்.