Bible Language

Psalms 39:12 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.
IRVTA   யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு,
என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்;
என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்;
என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல
நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன்.
ERVTA   கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும். என் கண்ணீரைப் பாரும். உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன். என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
RCTA   (13) ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீருக்குப் பாராமுகமாயிராதேயும். உம் முன்னிலையில் நான் அந்நியனாயுள்ளேன்: என் முன்னோர் அனைவர் போல நானும் வழிப்போக்கனே.
ECTA   ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; ஏனெனில், உமது முன்னிலையில் நான் ஓர் அன்னியன்; என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி!