Versions
TOV அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படி செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.
IRVTA அப்பொழுது நான் அவர்களை மிகவும் கடிந்துகொண்டு, நீங்கள் மதில் அருகில் இரவு தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படி செய்தால், உங்களை கைது செய்வேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராமலிருந்தார்கள்.
ERVTA ஆனால் நான் அந்த வியாபாரிகளையும் விற்பனையாளர்களையும் எச்சரிக்கை செய்தேன். அவர்களிடம் நான், "இரவில் சுவருக்கு முன்னால் தங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் இவ்வாறு செய்தால் நான் உங்களைக் கைது செய்வேன்" என்று கூறினேன். எனவே அந்நாளிலிருந்து அவர்கள் ஓய்வு நாளில் தங்கள் பொருள்களை விற்க வருவதில்லை.
RCTA நான் அவர்களைக் கண்டித்து, "நீங்கள் மதில் அருகே ஏன் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களானால் உங்களை நான் தண்டிப்பேன்" என்று அவர்களுக்குச் சொன்னேன். ஆகையால் அந்நாள் தொடங்கி அவர்கள் ஓய்வுநாளில் வராமலிருந்தனர்.
ECTA நான் அவர்களை எச்சரித்து, "ஏன் மதிலுக்கு எதிரில் நீங்கள் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களாகில் உங்களை நான் ஒரு கை பார்ப்பேன்" ;என்று கூறினேன். அப்பொழுதிலிருந்து அவர்கள் ஒய்வு நாளில் வராமலிருந்தார்கள்.