Bible Language

1 Samuel 14:12 (NLV) New Life Verson

Versions

TOV   தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா, கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
IRVTA   முகாமில் இருக்கிற மனிதர்கள் யோனத்தானையும் அவனுடைய ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்திற்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியைப் பார்த்து: என் பின்னாலே ஏறி வா, யெகோவா அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
ERVTA   கோட்டைக்குமேலிருந்த பெலிஸ்தர் "இங்கே வாருங்கள், உங்களுக்குப் பாடம் கற்பிக்கிறோம்!" என அவர்களை நோக்கிக் கூவினர். யோனத்தான் தன் உதவியாளரிடம், "மலைக்கு என்னைப் பின்தொடர்ந்து வா, கர்த்தர் பெலிஸ்தர்களை தோற்கடிக்க அடையாளம் காட்டினார்!" என்றான்.
RCTA   பின், பாளையத்தினின்று யோனத்தாசோடும் அவனுடைய பரிசையனோடும் பேசி, "எங்களிடத்திற்கு ஏறி வாருங்கள்; உங்களுக்கு ஒரு காரியம் சொல்வோம்" என்று சொன்னார்கள். அப்போது யோனத்தாசு, "போவோம், என்னைப் பின்தொடர்; ஆண்டவர் இஸ்ராயேல் கையில் அவர்களை ஒப்புவித்து விட்டார்" என்று பரிசையனுக்குச் சொல்லி,
ECTA   எல்லைக் காவலர் யோனத்தானுக்கும் அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோனுக்கு மறுமொழி கூறி, "எம்மிடம் வாருங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்" என்றனர். அப்போது யோனத்தான் தம் படைகளைக் தாங்குவோனிடம், "என் பின்னால் வா ஏனெனில் ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலின் கையில் ஒப்புவைத்துள்ளார்" என்றார்.