Versions
TOV உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.
IRVTA உன்னுடைய பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லோருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயைப் பார்த்து: ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; அவன் இங்கே வரும்வரை நான் சாப்பிடாமல் இருப்பேன் என்றான்.
ERVTA சாமுவேல் "உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?" எனக் கேட்டான். அதற்கு ஈசாய், "இல்லை கடைசி மகன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்" என்றான். சாமுவேலோ, "அவனை அழைத்து வா, அவன் வரும்வரை நாம் சாப்பிடக்கூடாது" என்றான்.
RCTA அப்பொழுது இசாயியைப் பார்த்துச் சாமுவேல், "உன் பிள்ளைகள் எல்லாம் இவ்வளவுதானா?" என்று கேட்டார். அதற்கு அவன், "இன்னும் ஒரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று மறுமொழி சொன்னான். அப்பொழுது சாமுவேல் இசாயியை நோக்கி, "நீ ஆள் அனுப்பி அவனை வரச்சொல்; அவன் வரும் வரை நான் உண்ணாது இருப்பேன்" என்றார்.
ECTA தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து "உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?" என்று கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்" என்று பதிலளித்தார் ஈசாய். அதற்கு சாமுவேல் அவரிடம், "ஆளனுப்பி அவனை அழைத்து வா ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார்.