Versions
TOV கேகிலா பட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
IRVTA கேகிலா பட்டணத்தார்கள் என்னையும் என்னுடைய மனிதர்களையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, யெகோவா: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
ERVTA மீண்டும் தாவீது, "என்னையும் எனது ஆட்களையும் கேகிலா ஜனங்கள் சவுலிடம் ஒப்படைத்துவிடுவார்களா?" என்று கேட்டான்." அவர்கள் செய்வார்கள்" என்று கர்த்தர் சொன்னார்.
RCTA மறுபடியும் தாவீது, "கெயிலா மனிதர்கள் என்னையும் என்னுடன் இருக்கிற மனிதர்களையும் சவுல் கையில் ஒப்படைப்பார்களா?" என்று கேட்டான். அதற்கு ஆண்டவர், "ஒப்படைப்பார்கள்" என்று சொன்னார்.
ECTA மீண்டும் தாவீது, "கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், "அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள் "என்றார்.