Bible Language

2 Chronicles 25:9 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்ய வேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
IRVTA   அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் படைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனிதனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனிதன்: அதைப்பார்க்கிலும் அதிகமாகக் யெகோவா உமக்குக் கொடுக்கமுடியும் என்றான்.
ERVTA   அமத்சியா தேவமனிதனிடம், "இஸ்ரவேல் படைக்கு நான் ஏற்கனவே கொடுத்தப் பணத்துக்கு என்ன செய்ய?" என்று கேட்டான். அதற்கு தேவ மனிதன், "கர்த்தரிடம் ஏராளமாக உள்ளது. அவர் உனக்கு அவற்றைவிட மிகுதியாகக் கொடுப்பார்" என்றான்.
RCTA   அப்பொழுது அமாசியாஸ் கடவுளின் மனிதரை நோக்கி, "அப்படியானால் இஸ்ராயேல் படைக்கு நான் கொடுத்த அந்த நூறு தாலந்தும் வீணாய்ப் போகுமே! இதற்கு என்ன சொல்லுகிறீர்?" என்றான். அதற்குக் கடவுளின் மனிதர் அவனைப் பார்த்து, "ஆண்டவரால் அதை விட அதிகமாய் உமக்குக் கொடுக்க முடியுமே" என்றார்.
ECTA   அப்பொழுது அமட்சியா கடவுளின் மனிதரை நோக்கி, "இஸ்ரயேலின் படைக்கு நான் கொடுத்துள்ள நாலாயிரம் கிலோகிராம் வெள்ளி வீணாகுமே!" என்றான். அதற்குக் கடவுளின் மனிதர், "ஆண்டவரால் இதைவிட மிகுதியாக உனக்குக் கொடுக்க முடியும்" என்றார்.