Bible Language

Acts 28:4 (NLV) New Life Verson

Versions

TOV   விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது அழனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
IRVTA   விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ERVTA   தீவில் வாழ்ந்த மக்கள் பவுலின் கையில் அப்பாம்பு தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், இம்மனிதன் ஒரு கொலைக்காரனாக இருக்க வேண்டும். அவன் கடலில் இறக்கவில்லை. ஆனால் தெய்வீக நீதியானது அவன் வாழ்வதை விரும்பவில்லை என்றனர்.
RCTA   அவர் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவின் வாசிகள் கண்டு, "இவன் ஒரு கொலைக்காரனாகதான் இருக்க வேண்டும். கடலுக்குத் தப்பித்துக்கொண்டாலும் தெய்வ நீதி இவனை உயிரோடிருக்க விடவில்லை" எனத் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
ECTA   அவர் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவினர் பார்த்தபோது, "இவன் ஒரு கொலைகாரன் என்பது உறுதி. கடலிருந்து இவன் தப்பித்துக் கொண்டாலும் நீதீயின் தெய்வம் இவனை வாழவிடவில்லை" என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்.