Versions
TOV அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
IRVTA அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன்” என்றார்.
ERVTA கர்த்தர் மோசேயை நோக்கி, "மலையின் உச்சி யில் என்னிடம் வா. அங்கே எனது கற்பலகைகளை யும், நீ அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நியாயப்பிரமாணத்தையும், கற்பனைகளையும் நான் உனக்கு கொடுப்பேன்" என்றார்.
RCTA அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ மலையின் மேல் நம்மிடத்திற்கு ஏறி வந்து இங்கே இரு. நாம் உனக்குக் கற்பலகைளையும், நீ அவர்களுக்குக் கற்பிப்பதற்கு நாம் எழுதிய கட்டளை முதலிய சட்ட திட்டங்களையும் தருவோம் என்றருளினார்.
ECTA ஆண்டவர் மோசேயை நோக்கி, "என்னிடம் மலைமேல் ஏறிவந்து இங்கேயே இரு. அவர்களுக்குக் கற்பிக்க நான் எழுதியுள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய கற்பலகைகளை உன்னிடம் அளிப்பேன்" என்றார்.