Bible Language

Jeremiah 30:3 (NLV) New Life Verson

Versions

TOV   இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத்திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் மக்களுடைய சிறையிருப்பிலிருந்து விடுவித்து, நான் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வேன்; அதை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ளுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   இதைச் செய். ஏனென்றால் நாட்கள் வரும்" என்று கர்த்தர் சொல்லுகிறார். "நான் எனது ஜனங்களை, இஸ்ரவேல் மற்றும் யூதாவை சிறையிருப்பிலிருந்து அழைத்துவரும்போது" இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. "நான் அவர்களது முற்பிதாக்களுக்கு அளித்த நாட்டிற்குள் திரும்பவும் அவர்களைக் குடியேற வைப்பேன். பிறகு, எனது ஜனங்கள் மீண்டும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்."
RCTA   ஏனெனில் இதோ, நாட்கள் வரும்; நம் மக்களாகிய இஸ்ராயேலுக்கும் யூதாவுக்கும் மீண்டும் முன்பு போல வளவாழ்வு தருவோம், என்கிறார் ஆண்டவர்; அவர்களுடைய முன்னோர்க்கு நாம் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்ப அழைத்து வருவோம்; அவர்கள் அதனை உடைமையாக்கிக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்."
ECTA   ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்; அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர். "