Versions
TOV மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
IRVTA மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
ERVTA பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், நீ எங்கே இருந்து வருகிறாய்? எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை.
RCTA மீண்டும் அரண்மனைக்குள் சென்று இயேசுவை நோக்கி, "நீ எங்கிருந்து வந்தவன் ?" என்று கேட்க, இயேசு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.
ECTA அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், "நீ எங்கிருந்து வந்தவன்?" என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை.