Bible Language

Judges 14:18 (NLV) New Life Verson

Versions

TOV   ஆகையால் ஏழாம் நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
IRVTA   ஆகையால் ஏழாம் நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனிதர்கள் அவனைப் பார்த்து: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் * நீங்கள் கொடுத்த பதில் என் மணப்பெண்ணிடத்தில் உழாதிருந்தீர்களானால், என்னுடைய விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
ERVTA   ஏழாவது நாள் சூரியன் மறையும் முன்னர், பெலிஸ்தியர்கள் பதிலை அறிந்தனர். அவர்கள் சிம்சோனிடம், "தேனைவிட சுவையானது எது? சிங்கத்தைக் காட்டிலும் வலிமையானது எது?" என்றார்கள். அப்போது சிம்சோன் அவர்களிடம், "என் பசுவால் நீங்கள் உழாவிட்டால் என் விடுகதைக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கமாட்டீர்கள்" என்றான்.
RCTA   இவர்கள் ஏழாம் நாள் சூரியன் மறையுமுன் அவனை நோக்கி: "தேனை விட இனிமையானது எது? சிங்கத்தை விட வலிமையானது எது?" என்றனர். அதற்கு அவன், "நீங்கள் என் கிடாரியுடன் உழுதிராவிட்டால் என் விடுகதையை நீங்கள் கண்டு பிடித்திருக்க மாட்டீர்கள்" என்றான்.
ECTA   ஏழாம் நாள் கதிரவன் மறையும் முன் அந்நகரின் ஆண்கள் அவரிடம், "தேனினும் இனியது எது? சிங்கத்தினும் வலியது எது?" என்றனர். அவர் அவர்களிடம், "என் இளம் பசுவைக்கொண்டு நீங்கள் உழுதிருக்காவிடில், என் விடுகதைக்கு விடை கண்டு பிடித்திருக்கவே மாட்டீர்கள்" என்றார்.