Bible Language

1 Kings 1:52 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்துகொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான்.
IRVTA   அப்பொழுது சாலொமோன்: அவன் தன்னை யோக்கியன் என்று காண்பித்தால் அவன் தலைமுடியில் ஒன்றும் தரையிலே விழாது; அவனிடம் தீமை காணப்பட்டால், அவன் சாகவேண்டும் என்றான்.
ERVTA   எனவே சாலொமோன், "அதோனியா தன்னை நல்லவன் என்று காட்டினால், நான் அவனது தலையிலுள்ள ஒரு மயிருக்குக்கூட தீங்குச் செய்யமாட்டேன். அவனிடம் கேடு இருந்தால், அவன் மரிக்க வேண்டும்" என்று பதில் சொன்னான்.
RCTA   அப்போது சாலமோன், "அவன் நல்லவனாய் நடந்து கொண்டால், அவன் தலை மயிரில் ஒன்றாவது தரையில் விழப் போவதில்லை; தீயவனாய் நடந்து கொண்டாலோ அவன் சாகவே சாவான்" என்றார்.
ECTA   சாலமோனும், "அவன் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டால், அவன் தலைமுடி ஒன்றுகூடத் தரையில் விழாது. ஆனால் அவனிடம் வஞ்சனை எதுவும் காணப்பட்டால் அவன் சாக வேண்டும்" என்று பதிலளித்தார்.