Bible Language

1 Kings 20:32 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான்.
IRVTA   சணலாடைகளைத் தங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளைத் தங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் வந்து: என்னை உயிரோடு வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்செய்கிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடு இருக்கிறானா, அவன் என்னுடைய சகோதரன் என்றான்.
ERVTA   பின் அவ்வாறே போய் இஸ்ரவேல் அரசனை சந்தித்தனர். "உங்கள் அடிமையான பெனாதாத் ‘எங்களை உயிரோடு விடுங்கள்’ என்று வேண்டுகிறார்" என்றனர். அதற்கு ஆகாப், "அவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா? அவன் என் சகோதரன்" என்றான்.
RCTA   அவ்விதமே அவர்கள் கோணி உடுத்தித் தலைகளைக் கயிறுகளால் சுற்றிக்கொண்டு இஸ்ராயேல் அரசனிடம் வந்தனர். "உம் ஊழியனான பெனாதாத் உம்மை மன்றாடி 'எனக்கு உயிர்ப்பிச்சை அளியும்' என்கிறார்" என்று அவர்கள் அரசனை வேண்டினர். அதற்கு அவன், "இன்னும் அவன் உயிரோடு இருந்தால், அவன் எனக்குச் சகோதரன்" என்றான்.
ECTA   அவ்விதமே அவர்கள் சாக்குத் துணியை இடுப்பிலும் கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேல் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனிடம், "உம் பணியாளர் பெனதாது, 'எனக்கு உயிர்ப்பிச்சை தாரும்' என்று உம்மிடம் மன்றாடுகிறார்" என்று கூறினர். அதற்கு அரசன், "அவர் என் சகோதரர்; அவர் இன்னும் உயிரோடு இருக்கின்றாரா?" என்றார்.