Bible Language

Genesis 30:31 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.
IRVTA   அதற்கு அவன்: “நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: “நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்ப்பேன்.
ERVTA   அதற்கு லாபான், "நான் என்ன தர வேண்டும்" என்று கூறு எனக் கேட்டான். யாக்கோபு அவனிடம், "நீங்கள் எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். நான் செய்த வேலைக்கு மட்டும் சம்பளம் கொடுங்கள். இந்தக் காரியம் மட்டும் செய்யுங்கள். நான் திரும்பிப் போய் உங்கள் மந்தையைக் கவனித்துக் கொள்கிறேன்.
RCTA   அதற்கு லாபான்: உனக்கு என்ன வேண்டும் சொல் என, அவன்: எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை. ஆயினும், நான் சொல்லுகிறபடி செய்விரானால், மறுபடியும் உமது மந்தைகளை மேய்த்துப் பாதுகாப்பேன்.
ECTA   அதற்கு லாபான், "நான் உமக்கு என்ன தரவேண்டும்?" என, யாக்கோபு "எனக்கு நீர் ஒன்றும் தர வேண்டியதில்லை. இந்த ஒன்றை மட்டும் நீர் எனக்குச் செய்தால், நான் தொடர்ந்து உம் மந்தையை மேய்த்துப் பாதுகாப்பேன்.