Bible Language

Isaiah 43:10 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
IRVTA   நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியக்காரனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்கிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
ERVTA   கர்த்தர் கூறுகிறார், "நீங்களே எனது சாட்சிகள். நீயே நான் தேர்ந்தெடுத்த தாசன். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, ஜனங்கள் என்னை நம்புவதற்கு நீங்கள் உதவவேண்டும். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, நான்தான் அவர் என்பதையும் நான் உண்மையான தேவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனக்கு முன்பாக வேறு தேவன் இருந்ததில்லை, எனக்குப் பிறகும் வேறு தேவன் இருக்கப் போவதில்லை.
RCTA   நீங்களே நமக்குச் சாட்சிகள் என்கிறார் ஆண்டவர், நாம் தேர்ந்து கொண்ட நம் ஊழியனும் நீங்களே. நம்மை அறிந்து நம் மேல் விசுவாசம் வைத்து, நாமே இருக்கிறவர் என்பதைக் கண்டு பிடிக்கச் செய்வது உங்கள் ஊழியமே. நமக்கு முன் தெய்வம் ஏதும் உண்டானதில்லை, நமக்குப் பின் ஏற்படப் போவதுமில்லை.
ECTA   "நீங்கள் என் சாட்சிகள்" என்கிறார் ஆண்டவர்; "நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் நீங்களே; என்னை அறிந்து என்மீது நம்பிக்கை வைப்பீர்கள்; "நானே அவர்" என்பதை உணர்ந்து கொள்வீர்கள்; எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை; எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை.