Versions
TOV அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.
IRVTA அப்படியே தாவீதும் அபிசாயும் இரவிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்; அவனுடைய தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் மக்களும் படுத்திருந்தார்கள்.
ERVTA இரவில் அவர்கள் அங்குச் சென்றார்கள். முகாமின் மையத்தில் சவுல் தூங்க, அவனது தலைமாட்டில் அவனது ஈட்டி தரையில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்னேரும் மற்ற வீரர்களும் சவுலைச் சுற்றிலும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
RCTA அப்படியே தாவீதும் அபிசாயியும் இரவில் ஆட்கள் இருந்த இடத்திற்கு வந்து, சவுல் தம் கூடாரத்தில் படுத்துத் தூங்குகிறதையும், அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தரையில் குத்தியிருக்கிறதையும், அப்நேரும் மற்ற ஆட்களும் அவரைச் சுற்றிலும் தூங்குகிறதையும் கண்டனர்.
ECTA ஆதலால் தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தரையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அபனேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர்.