Bible Language

Ecclesiastes 5 (RV) Revised Version

Versions

TOV   நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
IRVTA   {தேவனுக்குரிய பொருத்தனையில் நிலைத்தல்} PS நீ தேவாலயத்திற்குப் போகும்போது உன்னுடைய நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைவிட கேட்டறிவதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாமல் இருக்கிறார்கள்.
ERVTA   நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ளப் போகும்போது கவனமாக இருங்கள். அறிவற்ற ஜனங்களைப் போன்று நீங்கள் தேவனுக்குப் பலிகளைக் கொடுப்பதைவிட அவர் கூறுவதைக் கவனிப்பது நல்லது அறிவற்றவர்கள் தொடர்ந்து தீமைகளைச் செய்வார்கள். அவர்கள் அதைப்பற்றி தெரியாதவர்களாக இருப்பார்கள்.
RCTA   (4:17) நீ கடவுளின் ஆலயத்தினுள் புகும்போது அமைதியாய் நடக்கவும், அண்மையில் போய்ச் செவி கொடுத்துக் கேட்கவும் கடவாய். தாங்கள் செய்து வருகிற பொல்லாப்பைப்பற்றி ஒரு சிறிதும் கருதா மூடர்கள் இடும் பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே சிறந்தது.
ECTA   கடவுளின் கோவிலுக்குச் செல்லும்போது விழிப்புடனிரு. மதிகேடரைப்போலப் பலிசெலுத்துவதை விட, உள்ளே சென்று கேட்டறிவதே மேல். ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்த தீவினைகளை உணர்வதில்லை.