Versions
TOV அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றார்கள்.
IRVTA அப்பொழுது யூதா மனிதர்கள்: சுமைகாரர்களின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாக இருக்கிறது; நாங்கள் மதிலைக் கட்டக்கூடாது என்றார்கள்.
ERVTA எனவே அந்த நேரத்தில் யூதாவின் ஜனங்கள், "வேலைக்காரர்கள் சோர்வாக இருக்கிறார்கள். வழியில் எல்லாம் மண்ணும் மேடுமாயும் இருக்கிறது. எங்களால் தொடர்ந்து சுவரைக் கட்ட முடியாது.
RCTA அப்பொழுது யூதா நாட்டார் வந்து, "சுமப்போர் பலம் அற்றுப்போயினர். மண்ணோ அதிகமாயிருக்கிறது. மதில்களைக் கட்டி முடிக்க எங்களால் இயலாது" என்றனர்.
ECTA அப்பொழுது யூதா நாட்டினர், சுமப்போர் தளர்ந்து போயினர்; மண்மேடோ பெரிதாய் உள்ளது; மதில்களை நம்மால் கட்டிமுடிக்க இயலாது" என்றனர்.