Bible Language

Genesis 29:33 (RV) Revised Version

Versions

TOV   மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.
IRVTA   மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “நான் அற்பமாக எண்ணப்பட்டதைக் யெகோவா கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.
ERVTA   லேயாள் மீண்டும் கர்ப்பமானாள். அவள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு சிமியோன் என்று பெயர் வைத்தாள். "நான் நேசிக்கப்படாததைக் கண்டு கர்த்தர் எனக்கு இன்னொரு மகனை கொடுத்தார்" என்று கூறினாள்.
RCTA   மீண்டும் (அவள்) கருத்தாங்கி ஒரு புதல்வனை ஈன்றபோது: நான் அற்பமாய் எண்ணப்பட்டிருப்பதை ஆண்டவர் அறிந்தமையால், இவனையும் எனக்குத் தந்தருளினார் என்று சொல்லி, அவனுக்குச் சிமையோன் என்று பெயரிட்டாள்.
ECTA   மீண்டும் அவர் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். "நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு, இவனையும் எனக்குத் தந்தருளினார்" என்று சொல்லி, அவனுக்குச் "சிமியோன்" (2 ) என்று பெயரிட்டார்.