Bible Language

2 Chronicles 18:16 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
IRVTA   அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லோரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது யெகோவா: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்கு சமாதானத்தோடு திரும்பிப் போகட்டும் என்றார் என்று சொன்னான்.
ERVTA   பிறகு மிகாயா, "இஸ்ரவேல் ஜனங்கள் அனை வரும் மலைப்பகுதியில் சிதறி ஓடுவதை நான் பார்த்தேன். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் உள்ளனர். கர்த்தர், ‘அவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரமாக வீட்டிற்குப் போகட்டும்’ என்று கூறினார்" என்றான்.
RCTA   அப்பொழுது மிக்கேயாஸ், "இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் மலைகளில் சிதறி இருக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், 'இவர்களுக்குத் தலைவன் இல்லை. அவர்கள் தத்தம் வீட்டிற்கு அமைதியாய்த் திரும்பிப் போகட்டும்' என்கிறார்" என்று சொன்னார்.
ECTA   அப்பொழுது மீக்காயா, "இஸ்ரயேலர் யாவரும் ஆயனில்லா ஆடுகளைப்போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், 'இவர்களுக்குத் தலைவன் இல்லை; அவரவர்தம் வீட்டிற்கு அமைதியாகத் திரும்பிக் போகட்டும்;' என்றார்" என்று கூறினார்.