Versions
TOV அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான்.
IRVTA அமாவாசைக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் சாப்பாட்டிற்கு வராமல்போனது என்ன என்று தன்னுடைய மகனான யோனத்தானைக் கேட்டான்.
ERVTA மாதத்தின் இரண்டாம் நாளான மறுநாள் மீண்டும் தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. சவுல் தன் மகனிடம் "எதற்காக ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் அமாவாசை விருந்து உண்ண வரவில்லை?" என்று கேட்டான்.
RCTA மாதத்தின் இரண்டாம் நாளும் வந்தது; தாவீதின் இடம் இன்னும் காலியாகவே இருந்தது. அதைக் கண்ட சவுல் தம் மகன் யோனத்தாசை நோக்கி, "இசாயி மகன் நேற்றும் இன்றும் சாப்பிட வராதது ஏன்?" என்று கேட்டார்.
ECTA ஆனால் அமாவாசைக்கு அடுத்த நாளும் தாவீதின் இருக்கை காலியாக இருந்தது. அப்பொழுது சவுல் யோனத்தனை நோக்கி, "ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் உணவருந்த வராதது ஏன்? என்று கேட்டார்.