Versions
TOV இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.
IRVTA இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார்.
ERVTA "ஆசாரியர்களே, நீங்கள் எங்களிடம் நல்லவராக இருக்கும்படி கர்த்தரிடம் கேளுங்கள். ஆனால் அவர் நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார். இது எல்லாம் உங்களுடைய தவறு. "சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
RCTA 'இப்பொழுதோ கடவுள் உங்கள்மேல் அருள்கூரும்படி அவர் திருமுன் இறைஞ்சி நிற்கிறீர்கள்.' இத்தகைய காணிக்கையை அவருக்குக் கொடுத்திருக்க, உங்களுள் யாருக்கேனும் அவர் இன்முகம் காட்டுவாரோ, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
ECTA "இப்பொழுது இறைவன் நம்மீது இரக்கம் காட்டுமாறு அவர் திருமுன் இறைஞ்சி நில்லுங்கள். நீங்கள் இத்தகைய காணிக்கையைக் கொடுத்திருக்க உங்களுக்குள் யாருக்கேனும் அவர் ஆதரவு அளிப்பாரோ?" என்கிறார் படைகளின் ஆண்டவர்.