Bible Versions
Bible Books

1 Samuel 1:23 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.
IRVTA   {யெகோவாவுடைய ஆலயத்தில் சாமுவேல்} PS அப்பொழுது அவளுடைய கணவனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன்னுடைய விருப்பத்தின்படி செய்து, அவனை பால் மறக்கச்செய்யும்வரை இரு; யெகோவா தம்முடைய வார்த்தையைமட்டும் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்தப் பெண் தன்னுடைய பிள்ளையைப் பால் மறக்கச்செய்யும்வரைக்கும் பாலூட்டி வளர்த்தாள்.
ERVTA   அன்னாளின் கணவனான எல்க்கானா அவளிடம், "உனக்கு எது நல்லதென்று தெரிகிறதோ அதைச் செய். பையன் பாலை மறந்து உணவு உண்ணும் காலம்வரை நீ வீட்டிலேயே தங்கியிரு. நீ சொன்னபடியே கர்த்தர் உனக்கு செய்வாராக" என்றான். எனவே அன்னாள் தன் மகனை வளர்ப்பதற்காக வீட்டிலேயே இருந்தாள். அன்னாள் கொண்டுபோகிறாள்
RCTA   அவள் கணவன் ஏல்கானா அவளை நோக்கி, "உனக்கு நலம் என்று தோன்றுகிறபடியே செய்; பிள்ளை பால்குடி மறக்கும் வரை இரு. ஆண்டவர் தம் வாக்கை நிறைவேற்ற மன்றாடுகிறேன்" என்றான். ஆகவே அன்னா வீட்டில் தங்கிவிட்டாள். பிள்ளை பால்குடி மறக்கும் வரை அவனைப் பாலூட்டி வளர்த்தாள்.
ECTA   அவர் கணவர் எல்கானா, "உனக்குச் சிறந்தது எனப்படுவதைச் செய், பையன் பால் குடி மறக்கும் வரை இரு, ஆண்டவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக! என்று அவரிடம் கூறினார், ஆகவே அவர் தங்கியிருந்து பால்குடி மறக்கும் வரை தம் மகனுக்குப் பாலூட்டி வந்தார்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us