Bible Versions
Bible Books

Esther 7:8 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்து கிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.
IRVTA   ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள்.
ERVTA   அரசன் தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, அரசி எஸ்தர் உட் கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். அரசன் மிகவும் கோபமான குரலில், "நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ அரசியைத் தாக்குகிறாயோ?" எனக் கேட்டான். அரசன் இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள்.
RCTA   அரசன் சோலையினின்று விருந்து நடந்த இடத்திற்குத் திரும்பி வந்த போது எஸ்தர் படுத்துக் கிடந்த படுக்கையில் ஆமான் விழுந்து கிடக்கக் கண்டு சினங்கொண்டு, "என் மாளிகையிலே, என் கண்முன்னே அரசியைக் கற்பழிக்க இவனுக்கு என்ன துணிச்சல்!" என்று கத்தினான். அரசன் இச்சொற்களைக் கூறி முடிக்கு முன்னே அங்கிருந்த ஊழியர் ஆமானின் முகத்தை மூடினர்.
ECTA   மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து விருந்து நடைபெற இடத்திற்குத் திரும்பிய பொழுது, எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கச் கண்டனர். என் மாளிகையில் நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ? என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட, காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us