Bible Versions
Bible Books

Judges 4:9 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.
IRVTA   அதற்கு அவள்: நான் உன்னோடு நிச்சயமாக வருவேன்; ஆனாலும் நீ போகிற பயணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; யெகோவா சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழுந்து, பாராக்கோடு கேதேசுக்குப் போனாள்.
ERVTA   அதற்கு தெபோராள், "கண்டிப்பாக நான் உன்னோடு வருவேன், ஆனால் உன் மனப் பான்மையால் சிசெரா தோற்கடிக்கப்படும்போது உனக்கு அந்தப் புகழ் சேராது. கர்த்தர் ஒரு பெண் சிசெராவைத் தோற்கடிக்க அனுமதிப்பார்" என்று பதிலுரைத்தாள். எனவே, கேதேஸ் நகரத்திற்குத் தெபோராள் பாராக்குடன் சென்றாள்.
RCTA   அவளோ அவனிடம், "நான் உன்னோடு வரத் தடையில்லை; நான் வந்தால் வெற்றியின் மேன்மை உன்னைச் சாராது. ஏனெனில், சிசாரா பெண் ஒருத்தியால் காட்டிக் கொடுக்கப்படுவான்" என்றாள். எனவே, தெபோரா எழுந்து பாராக்கோடு கேதஸ் ஊருக்குச் சென்றாள்.
ECTA   அவர் அவரிடம், "நான் உம்முடன் உறுதியாக வருவேன். ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார்" என்றார். பின்பு தெபோரா எழுந்து பாராக்குடன் கெதேசு நோக்கிச் சென்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us