Bible Versions
Bible Books

1 Samuel 4:17 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டுப்போயிற்று என்றான்.
IRVTA   செய்தி கொண்டுவந்தவன் பதிலாக: இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; மக்களுக்குள்ளே பெரிய அழிவு உண்டானது; உம்முடைய மகன்களான ஒப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டது என்றான்.
ERVTA   அதற்கு அவன், "பெலிஸ்தர்களிடமிருந்து இஸ்ரவேலர்கள் ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படை ஏராளமான வீரர்களை இழந்துவிட்டது. உமது இரு மகன்களும் மரித்துப்போனார்கள். பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக் கொண்டனர்" என்றான்.
RCTA   செய்தி தெரிவிக்க வந்தவன் மறு மொழியாக, "பிலிஸ்தியருக்குப் புறமுதுகு காட்டி இஸ்ராயேலர் ஓடிப்போனார்கள்; மக்களில் பலர் மாண்டுபோனார்கள். மிகவும் வருத்தத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சி என்னவென்றால், உம் இரு புதல்வர்களாகிய ஒப்னியும் பினேசும் இறந்து பட்டனர்; கடவுளின் பேழை பிடிபட்டுவிட்டது" என்றான்.
ECTA   அதற்கு அத்தூதன், "இஸ்ரயேலர் பெலிஸ்தியர்முன் புற முதுக்கிட்டு ஓடினர். மேலும் மக்களிடையே பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுவிட்டது. உம் இருபுதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர். கடவுளின் பேழையும் கைப்பற்றப்பட்டுவிட்டது" என்று சொன்னான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us