Bible Versions
Bible Books

2 Samuel 18:14 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.
IRVTA   பின்பு யோவாப்: நான் இப்படி உன்னோடு பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையிலே மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடு தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய மார்பிலே குத்தினான்.
ERVTA   யோவாப், "நான் உன்னோடு இங்குப் பொழுதை வீணாக்கமாட்டேன்!" என்றான். அப்சலோம் உயிரோடு இன்னும் ஓக் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். யோவாப் மூன்று ஈட்டிகளை எடுத்தான். அவற்றை அப்சலோமை நோக்கி எறிந்தான். அவை அப்சலோமின் இருதயத்தை துளைத்தன.
RCTA   அதற்கு யோவாப், "உன் விருப்பப்படி நன் நடக்க போவதில்லை. உன் கண் முன்னேயே நான் சென்று அவனைக் கொன்று போடுகிறேன், பார்" என்று சொல்லி, தன் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்து வந்து அவற்றை அப்சலோமின் இதயத்தில் பாய்ச்சினான். குத்திய பின்னும் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோம் உயிரோடிருக்கக் கண்டு,
ECTA   "உன்னோடு இவ்வாறு நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டு யோவாபு தம் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச்சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அப்சலேமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us