Versions
TOV கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
IRVTA யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
ERVTA கர்த்தர் என்னிடம் இதனைக் காட்டினார். அரசனின் முதல் அறுவடைக்குப் பின் இரண்டவாது விளைச்சல் தொடங்குகிற காலத்தில் அவர் வெட்டுக்கிளிகளை உருவாக்கினார்.
RCTA இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: அரசனுக்கென முதல் புல்லறுப்பு செய்தான பின், இரண்டாம் பருவத்தில் புற்கள் தளிர்க்கத் தொடங்கும் போது இதோ, வெட்டுக்கிளிக் கூட்டங்களை அவர் உருவாக்கிக் கொண்டிருந்தார்.
ECTA தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே; "அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.