Versions
TOV பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார்.
IRVTA {ஓசியா தன் மனைவியுடன் செய்த சமரசம்} PS பின்பு யெகோவா என்னை நோக்கி: அந்நிய தெய்வங்களை மதித்து, திராட்சைரசமுள்ள * கிழக்கே வசித்த பண்டைக்காலத்து ஜனங்கள் தங்கள் தெய்வத்திற்கு காய்ந்த திராட்சையை படைப்பதால் பெரிய அறுவடை கிடைக்கும் என்று நம்பினார்கள். பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பிற்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு பெண்ணை நேசித்துக்கொள் என்று சொன்னார்.
ERVTA பிறகு கர்த்தர் மீண்டும் என்னிடம்,"கோமேருக்குப் பல நேசர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நீ தொடர்ந்து அவளை நேசி. ஏனென்றால் அதுவே கர்த்தருடைய அன்புக்கு ஒப்பானது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்நியத் தெய்வங்களை தொழுகின்றனர். அவர்கள் (உலர்ந்த) திராட்சை அப்பத்தை உண்ண விரும்புகின்றனர்"’ என்றார்.
RCTA ஆண்டவர் மீண்டும் என்னிடம் சொன்னதாவது: "வேற்றுத் தெய்வங்கள் மேல் பற்றுக்கொண்டு, உலர்ந்த திராட்சை அடைகளை விரும்புகின்ற இஸ்ராயேல் மக்கள் மேல் ஆண்டவர் எவ்வாறு அன்பு கொண்டுள்ளாரோ, அவ்வாறே வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒருத்தி மேல் நீ காதல் கொள்."
ECTA ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே; "இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு, உயர்ந்த திராட்சை அடைகளை விரும்புகின்றனர். எனினும் அவர்கள்மேல் ஆண்டவர் அன்பு வைத்துள்ளார். இதற்கு அடையாளமாக நீ மறுபடியும் போய், வேறொருவனால் காதலிக்கப் பட்டவளும் விபசாரியுமான ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்."